மருத்துவர் அருச்சனாவின் போராட்டத்தை பாராட்டும் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன்.

மருத்துவர் அருச்சனாவின் போராட்டத்தை பாராட்டும் தேசத்தின் புதல்வி
தாயகத்தில் இயங்கும் சிறிலங்கா அரச மருத்துவ நிலையங்களில் நிலவும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி மக்களின் நலன்களுக்காக போராடிவரும் மருத்துவர் அருச்சனா இராமநாதன் அவர்களின் போராட்டத்தை தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் சார்பாக பாராட்டுவதாக உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழு( WTCC ) அறிவித்துள்ளது.

தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ப. யோகச்சந்திரனால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மருத்துவர் அருச்சனா இராமநாதன் அவர்களின் போராட்டத்தை பாராட்டுவதுடன் மருத்துவர் அருச்சனா இராமநாதன் அவர்களின் போராட்த்திற்கு பக்கபலமாக அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளையும் உறுதுணையாக நிற்குமாறும் கேட்டுகொண்டுள்ளனர்.

அத்துடன் புலம்பெயர் தமிழ்த்தேசிய அமைப்புக்களை மருத்துவர் அருச்சனா இராமநாதன் அவர்களின் போராட்டம் வெற்றி பெற தேவையான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாறு உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழு ( WTCC ) அழைத்திருக்கின்றது.

தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முழுமையான ஊடக அறிக்கை>>>>

10.07.2024

ஊடக அறிக்கை

மருத்துவத்துறையில் நிலவும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி, தமிழீழ தாயக மக்களின் நலன்களை மையப்படுத்திய மருத்துவப் பணிகள் முன்னெடுக்கப்படுவதையும், செம்மையான முறையில் மருத்துவமனைகள் இயங்குவதையும் வலியுறுத்திப் போராடி வரும் மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்களுக்குத் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் சார்பில் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு உன்னதமான நோக்கத்திற்காக கடமை உணர்ச்சியோடும், கண்ணியத்தோடும் போராடும் மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்களுக்குப் பக்க பலமாக நின்று அவரது முயற்சி வெற்றி பெற உறுதுணை நிற்குமாறு அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வேண்டி நிற்கின்றது.

அத்தோடு, மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்களின் முயற்சி வெற்றி பெறுவதற்குத் தேவையான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு அனைத்துப் புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுக்கின்றது.

இத்தருணத்தில் மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்களின் நோக்கம் நிறைவேற உழைக்கும் தமிழீழ தாயக உறவுகளுக்குத் தேசத்தின் புதல்வியின் சார்பில் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

இவ்வண்ணம்,
ப.யோகச்சந்திரன்
இணைப்பாளர்
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு