நவம்பரில் தேசியத்தலைவர் வெளிவருவார்.

தமிழகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய பலரும் தமிழீழ தேசியதலைவரின் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழீழ உணர்சிக்கவிஞரும் தமிழீழ தேசிய தலைவரினால் வாழும் போதே மாமனிதர் என மதிப்பளிக்கப்பட்ட மாமனிதர் காசிஆனந்தன் அவர்களின் ´விலங்கை உடைத்து´ எனும் தன் வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தொல் திருமாவளவனினால் வெளியிட்டு வைக்கப்பட்ட உணர்சிக்கவிஞரின் நூலை திரைப்பட இயக்குனர் கலைப்புலி எஸ் தானு பெற்றுக்கொண்டார்.

வெளியீட்டு விழாவில் உரையாற்றிய வைகோ அவர்களின் கட்சியை சேர்ந்த மல்லை சத்தியா அவர்கள் நூல் வெளியீட்டு விழாவை தமிழீழ தேசியத்தலைவரும் காணொளி ஊடாக பார்த்துகொண்டிருப்பார் என தெரிவித்தார்.

விழாவின் நாயகன் மாமனிதர் காசி ஆனந்தன் தனது ஏற்புரையின் இறுதியில் நவம்பர் மாதம் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வெளியேவருவார் என எல்லோருக்கும் நம்பிக்கையூட்டினார்.


விலங்கை உடைத்து நூல் வெளியீட்டு நிகழ்வின் முழுமையான காணொளி

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

Please reload

Please Wait